வேட்டி சட்டையில் அரசியல்வாதி போல வந்த சூர்யா ..!! இவரும் அரசியலில் களமிறங்குவாரோ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தரமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூர்யா. மூத்த நடிகரான சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா.  நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  ஆரம்பத்தில் நடிப்பிற்காக பல விமர்சனங்களுக்கு ஆளான சூர்யா நாளடைவில் தன்னைத்தானே செதுக்கி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார் .

குறிப்பாக கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான சூரரைப்போற்று,  ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது . இதை அடுத்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்,

உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா . பின்னர் இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள புதிய படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ள ,

வாடிவாசல் படத்திலும் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஸ்ரீ மகேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் சூர்யா . மேலும் எப்போதும் பேண்ட் சட்டையில்,

வரும் சூர்யா வேட்டி சட்டை அணிந்து அரசியல்வாதி போல் வந்ததால் இவரும் ஒருவேளை அரசியலில் களமிறங்குவாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *